மயிலம்: மயிலம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் அமைந்துள்ள எமதண்டீஸ்வரர் ÷ காவிலில், நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள், மகா தீபாரனை வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்திருந்தார். மயிலம் அக்னி குளக்கரையிலுள்ள சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கொல்லியங்குணம் சிவன் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை பூசாரிகள் சண்முகம், விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர். இது ÷ பான்று தென்பசியார், பாதிராப்புலியூர், செண்டூர் ஆகிய இடங்களில் <உள்ள சிவன் கோவிலில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடந்தது.