பதிவு செய்த நாள்
27
அக்
2015
11:10
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம், பெண்ணாடம் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தன. விருத்தாசலம் விரு த்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை, சண்முக சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், எலுமிச்சை, தேன் உட்பட 12 பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.
பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை அழகிய காதலி அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 4:30 மணிய ளவில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.