ஊட்டி: ஐப்பசி மாதம் பவுர்னமி தினத்தின்று நடக்கும் அன்னாபிஷேகம் திருவிழா, ஊட்டியில் பல்வேறு கோவில்களிலும் கோலாகலமாக நடந்தது. ஊட்டி காந்தல் காசிவிஸ்வநாதர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலை, 5.30 மணிக்குமேல் மூலவருக்கு அன்னத்தின் மூலம் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். * குன்னுார் அருகே அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை வளாகத்தினுள் உள்ள பாறை முனீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், சென்னை நண்பர்கள் குழு சார்பில், ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. 13வது ஆண்டாக நேற்று நடந்த விழாவில், காலை 10.30 மணிக்கு சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பொது மேலாளர் (பொ) சவுத்திரி, உதவி பொதுமேலாளர் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.