பதிவு செய்த நாள்
29
அக்
2015
10:10
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஏமப்பேர் காசி விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது. கோவிலில் அதிகாலை பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். மாலையில் விஸ்வநாதேஸ்வரருக்கு அன்னம், பழங்கள் சாற்றி அலங்காரம் செய் தனர். சிவனுக்கு பிரியமான ருத்ர மந்திரங்களை வாசித்து ஆராதித்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், தென்கீரனூர், முடியனூர் அருணாசலேஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், சின்னசேலம் கங்காதீஸ்வரர், பெரியசிறுவத்தூர் கணபதீஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், ஆலத்தூர், சிறுவத்தூர், தண்டலை, விருகாவூர் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வைபவம் நடந்தது. பெண்கள் அகல்விளக்கு தீபமேற்றி வழிபட்டனர்.