செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மாலை 6 மணிக்கு ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து. அருணாச்சலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்தனர். இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதருக்கு அன்னாபிஷேகம் செய்தனர். உபயதாரர் திருஞானம், செல்வராணி, நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி கலந்து கொண்டனர். பூஜைகளை அர்ச்சகர் செல்வம் செய்தார். மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ் வரர் குடைவறை கோவிலில் மத்தளேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார். ஆலம்பூண்டி மங்களாம்பிகை சமேத ஆலகாலேஸ்வரர் கோவிலில் ஆலகாலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடத்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.