விருதுநகர்: விருதுநகர் சூலக்கரை வ.உ.சி.,நகர் பிரசன்ன விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து பிரசன்ன விநாயகர், தட்சிணா மூர்த்தி, விஷ்ணு துர்க்கை விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.