பதிவு செய்த நாள்
11
நவ
2015
11:11
கருமத்தம்பட்டி: பெரிய மோப்பிரிபாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வரும், 16ம் தேதி நடக்கிறது.
கருமத்தம்பட்டி அடுத்த பெரிய மோப்பிரிபாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், திருப்பணிகள் முடிந்து வரும், 13 ம்தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம் நடக்கிறது. 14ம் தேதி மாலை, 5:00 மணி முதல் வாஸ்து சாந்தி, காப்பணிதல், முதற்கால ஹோமம் நடக்கிறது.
16ம் தேதி காலை, 6:30 மணிக்கு நான்காம் கால ஹோமம் முடிந்து, பூஜிக்கப்பட்ட கலசங்கள்,
கோவிலை வலம் வருகின்றன. காலை, 9:15 முதல், 10:15 மணிக்குள் செல்வநாயகி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.