திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதி கோயில்களில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திருத்தளிநாதர் கோயிலில் நாடு நலம்பெற வேண்டி, கூட்டு பிரார்த்னை நடந்தது. திருமுருகன் திருப்பேரவையினர் ஏற்பாடுகளை செய்தனர். காலை 9 மணிக்கு ராஜா, ரமேஷ் குருக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருத்தளிநாதர், சிவகாமி அம்மன், யோக பைரவர், முருகன் சன்னதிகளில் பக்தர்கள் பஜனை செய்தனர்.