ஆத்தூர்: தீபாவளி பண்டிகையொட்டி, ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தீபாவளி பண்டிகையொட்டி, ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், பூதேவி, ஸ்ரீதேவியுடன், வெங்கடேச பெருமாள் ஸ்வாமி, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.