பதிவு செய்த நாள்
12
நவ
2015
10:11
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியேங்கராதேவி அம்மன் கோவிலில், ஐப்பசி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியேங்கராதேவி அம்மன் கோவிலில், ஐப்பசி மாத அமாவாசையையொட்டி, நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின் கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில், 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி வெற்றிலையில் எழுதி யாக குண்டத்தில் கொட்டி யாகம் வளர்க்கப்பட்டது. யாககுண்டத்தில் ஏராளமான புடவை மற்றும் துணிகள் சாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பல்வேறு பழ வகைகள், பால், தயிர், நெய் குண்டத்தில் இட்டு, தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பாதூர் அறிவுடை நம்பி, காசி, பாலமுருகன் ஆகியோர் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.