திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பாண்டுரங்கன் ஹரி பஜனைக் கூடத்தில் கவுரி விரத சிறப்பு பூஜைகள் நடந்தன. மஞ்சள் பொடி, சந்தனத்தால் உருவம் தயாரித்து, தீபாராதனை நடந்தது. 21 நாட்கள் விரதம் மேற்கொண்ட பெண் பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். நவ., 13ல் அம்மன் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் கரைக்கப்படுகிறது. நிர்வாகிகள் அங்குச்சாமி, நாராயணன், நாராயணசாமி, தங்கராமானுஜம், கோபால்சாமி, பாலு இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.