மதுரை: மதுரை சொக்கலிங்கம் நகரிலுள்ள பூமாரியம்மன் கோவில் உற்சவ விழா 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நடைபெற்றது, மாலை 6 மணிக்கு கரகம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை அம்மனுக்கு பொங்கல் வைத்து விசேஷ பூஜை மற்றும் அன்னதானமும், ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.