Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லிக்குப்பத்தில் அமாவாசை நோன்பு: ... சுவாமிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! சுவாமிமலை முருகன் கோயிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது!
எழுத்தின் அளவு:
மருதமலையில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது!

பதிவு செய்த நாள்

12 நவ
2015
12:11

கோவை: முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது. கோவையில் புகழ்பெற்ற கோவில்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்று. இங்கு, கந்தர் சஷ்டி விழா மற்றும், தைப்பூசத்திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. பின், காலை, 8:00 மணி முதல் யாக சாலை பூஜை, புண்யாகம், உள்ளிட்டவை செய்யப்பட்டு, இறை அனுமதி பெறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் சரண கோஷத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள், காப்பு கட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காப்பு கட்டும் பக்தர்கள், விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காஹரம் வரை, ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பர். காலை கோவில் வளாகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து காப்பு கட்டிச்சென்றனர். சஷ்டி விழாவையோட்டி, அடுத்த ஐந்து நாட்களுக்கும், முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் நிகழ்வு வருகின்ற, 17ம் தேதி மதியம், 2:45 மணிக்கு நடக்கிறது. இதில், முருகன் நான்கு சூரன்களை வதம் செய்கிறார். சூரசம்ஹாரத்தின் மறுநாள் காலை, முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar