Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குரும்பூர் அருகே புதைந்த சிவன் ... சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோவில் கல்வெட்டு கூறுவது என்ன?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2011
11:07

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில், வள்ளி குகையில் திருமலைநாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் வடக்கு வெளிப்பிரகாரத்தில் வள்ளிகுகை உள்ளது. இது சந்தான மலை எனப்படுகிறது. இதை ஆதிசங்கரர், கந்த மாதன பர்வதம் எனக்குறிப்பிடுகிறார். இதற்கு செல்லும் வழியில் பலகையால் ஆன, 4.5 அடி உயரம், 1.5 அகலம் கொண்ட கல்வெட்டு உள்ளது. மிகப்பழமையான இக்கல்வெட்டில் பழங்கால தமிழில், 34 வரிகள் எழுதப்பட்டிருந்தன. எண்ணெய்மக்கு படிந்த நிலையில் உள்ள இக்கல்வெட்டினை, திருச்செந்தூர் செந்திலாண்டவர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் தவசிமுத்து, சமீபத்தில் ஆய்வு செய்தார். கல்வெட்டு ஆராய்ச்சியாளரான அவர் கூறியதாவது: கி.பி., 1656ல் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்தார். அப்போது, அவரது உத்தரவுப்படி திருச்செந்தூரைச் சேர்ந்த, முத்தையா ஜோதிடர் இந்த வள்ளிகுகை முன்மண்டபம், வெளிப்புற கிணறு அமைத்து பக்தர்கள் தினசரி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இக்கல்வெட்டு வைகாசி 4ம் தேதி பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி., 1648ல் டக்சுக்காரர்கள் திருச்செந்தூரில் நகை, பொருட்களை கொள்ளையடித்த போது சிற்பங்கள், குடைவரை ஓவியங்களையும் சிதைத்துச் சென்றனர். பின்னர் ஆட்சிக்கு வந்த மன்னர் திருமலை நாயக்கர் , இங்கு எஞ்சியிருந்த இந்த கல்வெட்டு உள்ளிட்ட வரலாற்று சுவடுகளை புதுப்பித்துள்ளார். முருகனை மணம் முடிப்பதற்காக வள்ளி, சிவபெருமானை லிங்க வடிவில் வணங்கியது, இதன் ஸ்தல வரலாறு. மேற்கண்ட விவரங்கள் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar