Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோவிலில் கும்பாபிஷேக ... வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை உற்சவம்! வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீராத வியாதிகளைத் தீர்க்கும் சாணியடி திருவிழா!
எழுத்தின் அளவு:
தீராத வியாதிகளைத் தீர்க்கும் சாணியடி திருவிழா!

பதிவு செய்த நாள்

14 நவ
2015
10:11

தாளவாடி: தாளவாடி பகுதியில் தீராத வியாதிகளைத் தீர்க்கும், சாணியடித் திருவிழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான  இளைஞர்கள், சாணியை, ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி ஒன்றியம்,  கும்டாபுரம் கிராமத்தில், 200 ஆண்டு பழமையான  பீரேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும், தீபாவளி முடிந்த மூ ன்றாவது நாள், நடக்கும் சாணியடித் திருவிழா வெகு பிரசித்தமானது. இதன்படி நேற்று விழா நடந்தது.

முன்னதாக விழாவை ஒட்டி, இளைஞர்கள் இருவரை கழுதை மீது அமர வைத்து, கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.  இதை தொடர்ந்து,  கோயில் அருகே வீதியில் தயாராக குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை, நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கையில் எடுத்து, ஒருவர் மீது ஒருவர்  வீசிக் கொண்டாடினர். இரண்டு மணி நேரம் நடந்த விழாவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், கண்டு களித்தனர். விழா குறித்து கும்டாபுரம் கிராம  மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், 200 ஆண்டுகளுக்கு முன், ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். இறந்த பிறகு அவர் உடலை, மாட்டுச்சாணக் குவிய லில் புதைத்து விட்டனர். அந்தக் குவியலை, விவசாயத்துக்காக, ஒரு வண்டியில் தோண்டி  போட்ட போது, சாணத்திலிருந்து ரத்தம் கசிந்தது.  சாணத்தை களைந்து தேடியபோது, அதில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதை எடுத்து கோயில் அமைத்தோம். அப்போது சாமியாடிய ஒருவர்,  ‘என்னை (சிவலிங்கத்தை) சாணி குவியலில் இருந்து எடுத்ததால், ஒருவருக்கு, ஒருவர் சாணியை எடுத்து உடலில் அடித்து வழிபட வேண்டும்’  என்றார்.  அதன்படி, இந்த விழாவை பாரம்பரியமாக கொண்டாடி வருகிறோம். இப்படிச் செய்வதால், தீராத வியாதிகள், உடலில் உள்ள புண்கள்  குணமாகிறது, கிராமத்தில் விவசாயம் செழிப்பாகிறது.  இவ்வாறு  கூறினர். திருவிழாவை ஒட்டி, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே சாணம் ÷ சகரிக்கின்றனர். திருவிழா முடிந்ததும் சாணம் ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்கும் விவசாயிகள், விளை நிலங்களுக்கு எருவாக பய ன்படுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar