செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அ ங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பகல் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து 8:00 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும் நடந்தது. பக்தர்கள் பக்திபாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் உற்சவ ஏற்பாடுகளை செய்தனர்.