தென்கரை: சோழவந்தான், தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாதர்சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தன. நவ., 17 காலை 5 மணிக்கு முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு கோயில் முன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நவ., 18 ல் காலை அன்னப் பாவாடை தரிசனம், மாலை திருக்கல்யாணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பிரதோஷ கமிட்டி நிர்வாகிகள் செய்துள்ளனர்.