Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சுந்தரவள்ளியம்மன் கோயிலில் ... சபரிமலை நடை திறப்பு: தயாரானது சன்னிதானம்! சபரிமலை நடை திறப்பு: தயாரானது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி 3 ம் நாள் விழா! நவ., 17 ல் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி 3 ம் நாள் விழா! நவ., 17 ல் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

14 நவ
2015
06:11

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ., 12 ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நவ., 17ல் சூர சம்ஹாரம் நடக்கிறது. விழாவின் 3 ம் நாளான நவ., 13 ல் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முருகனின் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு முருகபெருமான் சூரனை சம்ஹாரம் செய்து, சிவ பெருமானை வழிபட்ட புகழ் பெற்ற திருத்தலமாகும். இந் நிகழ்ச்சியினை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கந்தசஷ்டி விழா நவ., 12 ல் துவங்கியது.

தங்க சப்பரம்:
விழா நாட்களில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். ஜெயந்திநாதர் காலை 8 மணிக்கு யாக சாலையில் எழுந்தருளுவார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கும்.பின் தங்கசப்பரத்தில் எழுந்தருளுகிறார். நவ., 13, காலை யாகசாலையில் எழுந்தருளிய ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின் வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு எழுந்தருளினார். பின் ஜெயந்தி நாதர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு ஜெயந்திநாதர் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து இரவு கோயில் வந்து சேர்ந்தார்.

சூரசம்ஹாரம்:
நவ.,17 ல் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். நவ., 18 மாலை 5.30 மணிக்கு முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar