Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று ... பழநியில் நாளை சூரசம்ஹாரம்: தங்கரத புறப்பாடு நிறுத்தம் பழநியில் நாளை சூரசம்ஹாரம்: தங்கரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கந்த சஷ்டிவிழா தங்கரதத்தில் ஜெயந்திநாதர்!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கந்த சஷ்டிவிழா தங்கரதத்தில் ஜெயந்திநாதர்!

பதிவு செய்த நாள்

16 நவ
2015
11:11

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ., 12 ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. விழாவின் 4 ம் நாளான நேற்று தங்க ரதத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழா நவ., 12 ல் துவங்கியது.அன்று முதல் பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவங்கினர். நாளை நவ.,17 ல் சூர சம்ஹாரம் நடக்கவுள்ளது. தங்க சப்பரம்: விழா நாட்களில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். ஜெயந்திநாதர் காலை 8 மணிக்கு யாக சாலையில் எழுந்தருளுவார்.

அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கும்.பின் தங்கசப்பரத்தில் எழுந்தருள்வார். சண்முக விலாச மண்டபத்தை வந்து சேர்வார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடக்கும். பின் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து இரவு கோயில் வந்து சேர்வார். காலை யாகசாலையில் எழுந்தருளிய ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின் வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 1.30 மணிக்கு எழுந்தருளினார். பின் ஜெயந்தி நாதர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு ஜெயந்திநாதர் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து இரவு கோயில் வந்து சேர்ந்தார்.

சூரசம்ஹாரம்: நாளை சூர சம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 4.00 மணிக்கு கடற்கரை மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். 4.30 மணிக்கு கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். நவ., 18 மாலை 5.30 மணிக்கு முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar