திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2015 04:11
திருவண்ணாமலை: அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை சிவாச்சாரியார்கள், கோவிலில் 62 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தின் முன் வேதமந்திரங்கள் முழங்க,ஓதுவார்கள் திருமறை இசைக்க, மேளதாளம் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷமிட காலை 7.05 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பாரசக்தியம்மன் தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.