பதிவு செய்த நாள்
16
நவ
2015
06:11
மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச் சுமைகள் நீங்க வழி செய்யுமாறு சிவபெரு மானிடம் வேண்டிய போது பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் நாகை மாவட்டம் மயிலாடு துறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச் சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் புதிய நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது.இத் தகைய பெருமைமிக்க துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசிமாதம் 30 நாட்களுக்கு ம் கொண்டாடப்படுகிறது.அதேபோல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 18ம் தேதி ஐப்பசி (துலா மாதம்) மாதம் பிறப்பு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து கடந்த 7ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் கடைசி 10 நா ள் உற்சவம் தொடங்கியது. முக்கிய திருவிழாவாக கடந்த 11ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், 13ம் தே தி திருக்கல்யாணமும், 15ம் தேதி திருத்தேரோட்டமும் நடந்தது. ஐப்பசி 30ம் தேதி கடைமு க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.அதனை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி,ஞானாம் பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்தநாயகி சமேத அய்யா றப்பர் சுவாமி, காசி விஸ்வநாதர் சுவாமி ஆகிய ஐந்துசுவாமிகளும் பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங் காரத்தில் காவிரி துலாக்கட்டத்தின் இருகரைகளிலும் எழுந்தருளின.
மதியம் 2.45 மணியளவில் காவிரி க்கரையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தீர்த்தம்கொடுக் கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி சுவாமியை வழிபட்டு சென்றனர். இதில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் அம்ப லவாண தம்பிரான் சுவாமிகள்,சுப்ரமணியதம்பிரான் சுவாமிகள்,நீதிபதி தங்கமணிகணேசன், அறநிலை யத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், நகராட்சி தலைவி பவானி,போலீஸ் கமிஷ்னர் ராமகிருஷ்ண ன், கவிஞர்ராதாகிருஷ்ணன் உட்பட நகர முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.