பதிவு செய்த நாள்
18
நவ
2015
10:11
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் இன்று (18ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது . ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் இன்று காலை, 8:45 மணிக்கு துவங்கியது.
மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உட்பட, ஐந்து சன்னதிகள், ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம் உட்பட, 10 கோபுரங்களுக்கும் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் இதை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்ட, 12 இடங்களில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவிலின் பிரதான நுழைவு வாயில்களில், கோபுர வாசல்களில் மெட்டல் டிடெக்டர் பொருத்தியும், ஸ்கேனர் கருவியின் மூலம் உடமைகளை சோதனை செய்த பின், பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.