பதிவு செய்த நாள்
18
நவ
2015
12:11
மயிலம்: மயிலம் சுப்ரமணியர் கோவில் கந்த சஷ்டி விழாவில், சூரசம்ஹாரம் நடந்தது. மயிலத்தில் உள்ள, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு, பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசத்தில் முருகர் அருள் பாலித்தார். இரவு 8:00 மணிக்கு, முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தேரடி வீதியில், முருகன் பெருமான் சூர சம்ஹாரமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.