Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி: ... பழநியில் சூரசம்ஹாரம்: நான்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

சபரிமலை:சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன, என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் கூறினார். சன்னிதானத்தில் அவர் கூறியதாவது:இந்த ஆண்டு பக்தர்களுக்கு வசதிகள் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனத்துக்கு தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்காக ஏற்படுத்தப்பட்ட விர்ச்சுவல் கியூ என்ற ஆன்லைன் முன்பதிவு வசதியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.பம்பை, சன்னிதானத்தை கழிவுகள் இல்லாத இடமாக மாற்ற 22.87 கோடி ரூபாய் செலவில் சீவேஜ் பிளான்ட் அமைக்கப்பட்டு அது செயல்பட தொடங்கியுள்ளது. குப்பைகளை எரிக்க மூன்று இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை ஆறு கியூ காம்ப்ளக்ஸ் அமைக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாளிகைப்புறம் கோயில் அருகில் 2.05 கோடி ரூபாய் செலவிலும், பம்பையில் 1.87 கோடி ரூபாய் செலவிலும் புதிய குளியலறை வளாகம் கட்டப்பட்டுள்ளன. பம்பையில் 1.45 கோடி ரூபாய் செலவில் புதிய பிரசாத தயாரிப்பு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 8.14 ரூபாய் கோடி செலவில் நடைப்பாதை, 14 மீட்டர் அகலத்தில் ரோடுகள், இண்டர்லாக் டைல்ஸ் பதித்த பார்க்கிங் கிரவுண்டு, பத்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 ஆயிரம் வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். பம்பை முதல் சன்னிதானம் வரை பாதை சீரமைக்கப்பட்டு பக்தர்கள் இளைப்பாற ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பை மணல் பரப்பில் இண்டர்லாக் டைல்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய மூன்று மருத்துவ வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஒருங்கிணைந்த மருத்துவ வளாகம் பம்பையில் திறக்கப்பட்டுள்ளது. அப்பம் , அரவணை, அபிஷேக டிக்கெட்டுகள், தனலட்சுமி வங்கிகளில் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar