Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாசக்தி மாரியம்மன் கோவிலில் நவ.,22ல் ... லட்சுமி ஹயக்ரீவர் மஹா யாகம்: ஐயப்பா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலையில் நான்கு வீதிகளில் சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

சென்னிமலை: கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலையில், நான்கு ரத வீதிகளிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர். சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா, கடந்த 12 ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, கடந்த, 5 நாட்களாக, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதையொட்டி, நேற்று இரவு, உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளினார். 8.30 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா தொடங்கியது. சென்னிமலை நான்கு ரத வீதிகளிலும் நடந்த, சூரன் வதம் செய்யும் நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷ்ம முழங்க, நேரில் கண்டு களித்தனர். மேற்கு ரத வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்சியும் நடந்தது. இதை தொடர்ந்து, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். இன்று காலை, 11 மணிக்கு, முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar