Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்தி மலைக்கோவில்களில் சஷ்டி விழா ... "கார்த்திகை முதல் நாள் பழநியில் மாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை சூரசம்ஹார விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

உடுமலை: கந்தசஷ்டியை முன்னிட்டு, பாப்பான் குளம், ஞானதண்டாயுதபாணி கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில்களில், சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா, நவ., 12ல் துவங்கியது; இன்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. மடத்துக்குளம், பாப்பான்குளத்தில் உள்ள ஞானதண்டாயுதபாணி கோவில், உடுமலை, பழநி ரோட்டில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவில், முத்தையாபிள்ளை லே-அவுட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மற்றும் போடிபட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில்களில், கந்தசஷ்டி விழா, நவ., 12ம் தேதி சிறப்பு அபிேஷக அலங்கார பூஜையுடன் துவங்கியது.

சூரசம்ஹார விழா முன்னிட்டு, நேற்று காலை தண்டாயுதபாணி சுப்ரபாதம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, வீரவேல் முருகன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். வெற்றிவேல் முன் செல்ல, பக்தர்கள் முன்னிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கிழக்கு திருமுற்றத்தில் வெற்றி வாகை சூடப்பட்டது; மயில்வாகனம், சேவல் கொடி ஏற்றப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு, மகா தீபாராதனையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, சுவாமிக்கு வென்னீர் அபிேஷகம், புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சுப்ரமணியசுவாமி சன்னதியில், நேற்று காலை, 8:30 மணிக்கு, யாகசாலை வேள்வி பூஜையும், பிற்பகல், 3:15 மணிக்கு, வேல்வாங்கும் உற்சவமும், மாலை, 4:00 மணிக்கு, சுவாமி புறப்பாடும், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று திருக்கல்யாண உற்சவம்:  கந்தசஷ்டி பெருவிழா நிறைவு நாளான இன்று, பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவில் மற்றும் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், முத்தையாபிள்ளை லே-அவுட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவில்களில், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையடுத்து ஞானதண்டாயுதபாணி கோவிலில் இன்று காலை, 7:00 மணிக்கு தீபாராதனையும். 11:00 மணிக்கு, உச்சிகால அபிேஷகம், ஆறாட்டு உற்சவமும் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஊர் விநாயகர் கோவிலில் இருந்து, திருமண சீர் வரிசைகள் கொண்டுவரப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு, 9:15 மணிக்கு, திருக்கல்யாண கோலத்தில் சுவாமி வீதியுலா, விருந்து, ஊஞ்சல் வசந்தவிழா நடக்கிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை, வள்ளி-தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள சுப்ரமணியசுவாமிக்கு, இன்று காலை, 8:00 மணிக்கு அபிேஷகம், அலங்காரமும், 8:30 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சனையும், காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை, 6:00 மணிக்கு, சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar