Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுக்கரையில் ஆடி அமாவாசை ராமேஸ்வரத்தில் வெள்ளிரத தேரோட்டம் ராமேஸ்வரத்தில் வெள்ளிரத தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல் மலையனூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் :பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
10:08

செஞ்சி : மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நள்ளிரவில் பக்தர்கள் குவிந்தனர். கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், 6 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆடி அமாவாசையுடன், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 9 மணி முதல் 9.30 மணிவரை, திடீரென மழை கொட்டியது. மீண்டும் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை, 11.30க்கு துவங்கி 12.30 மணிக்கு முடித்தனர். சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அங்காளம்மனுக்கு, பக்திப் பாடல்களும் தாலாட்டுப் பாடல்களும் பாடி, ஊற்சவம் நடத்தினர். இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவதற்குள்ளாக, மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், வந்த வண்ணம் இருந்தனர். இவர்களின் வாகனங்களால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பஸ்கள் வரும், கொடுக்கன்குப்பம், சிறுதலைப்பூண்டி, அவலூர்ப்பேட்டை சாலைகளில், வாகன நெரிசல் ஏற்பட்டது. சென்னை, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, வளத்தி வழியாக மேல் மலையனூர் செல்லும் சாலையில், இரவு 12 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேல் மலையனூரில் இருந்து வளத்தி வரையிலான, 6 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar