Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் வெள்ளிரத தேரோட்டம் அழகர்கோவில் ஆடி திருவிழா ஆக., 5ல் கொடியேற்றம் அழகர்கோவில் ஆடி திருவிழா ஆக., 5ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனிமய மாதா பேராலயத்தில் நற்கருணை பவனி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
10:08

தூத்துக்குடி : தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவில் நேற்று நற்கருணை பவனி நடந்தது. இந்த பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா என்றழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 429வது ஆண்டு பெருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது. பெருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பங்கு இறைமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், பனை தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், கப்பல் மாலுமி, இளைஞர்கள், செபக்குழுக்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்காக சிறப்பு திருப்பலிகளும், இரவில் மறையுரையும் நடந்து வருகிறது. விழாவின் 6ம் நாள் நிகழ்வாக நேற்று புதுநன்மை மற்றும் நற்கருணை பவனி விழா நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு பங்கின் மரியாயின் சேனை, பிரான்சிஸ்கன் 3ம் சபை, இளைஞர்கள், இளம்பெண்கள், மறைகல்வி மா ணாக்கர் மற்றும் திருச்சிலுவை செபக்குழுவினருக்கான திருப்பலி நடந்தது. 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் புதுநன்மை திருப்பலி நடந்தது. 9 மணிக்கு ஸ்டேட் பாங்க் காலனி பங்கு இறைமக்களுக்காக சிறப்பு திருப்பலி நடந்தது. 10ம ணிக்கு மலையாளத்திலும் 11 மணிக்கு ஆங்கிலத் திருப்பலியும் நடந்தது. மாலை 5.15 மணிக்கு துறைமுக பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது. 6.15 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் செபமாலை, நற்கருணை பவனி, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீரும் நடந்தது. நற்கருணை பவனியில் பல்லாயிரக்கணக்கான பங்கு இறைமக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இரவில் நற்கருணை இறை பிரசன்னத்தின் உச்ச அனுபவம் என்ற தலைப்பில் மதுரை தூய பேதுரு குருமடத்தை சேர்ந்த மரிய அந்தோணி மறையுரையாற்றினார். இன்று மறைமாவட்ட ஆசன ஆலய பங்கு இறைமக்கள், திரேஸ்புரம் பங்கு இறைமக்கள், சலேசிய துறவிகள், டி.சவேரியார்புரம் பங்கு இறைமக்கள்,நற்செய்தி பணியாளர்கள் மற்றும் சமூக பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. இரவில் மதுரை மறைமாவட்டத்தை சேர்ந்த இயேசு கருணா "அன்னை இறைவார்த்தையின் சாட்சி என்ற தலைப்பில் மறையுரையாற்றுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar