காரைக்கால்: காரைக்கால் நித்தீஸ்வரகோவில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. காரைக்கால் புதியபேருந்து நிலையம் நித்தீஸ்வரம் பகுதியில் நேற்று முன்தினம் நித்யகல்யாணி அம்பாள் ஸ்மேத ஸ்ரீ நித்தீஸ்வரகோவில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்குகளுக்கு சிறப்பு ஹேமாங்கள் நடத்தப்பட்டது.சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை செய்யப்பட்டு சாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.பின் இதுப்போல் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனி பகவான் கோவிலில் சோமவாரத்தையொட்டி நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சொர்ண கணபதி, சுப்ரமணியர், தர்பாரண்யேஸ்வர், பிரணாம்பிகை, சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆரானைகள் செய்யப்பட்டது.இதில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.