விருத்தாசலம்: கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. விருத்தாசலம் விரு த்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில், விருத்தகிரீஸ்வரர் முன் மண்டபத்தில் புனித நீர் கலசம், 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி வன்னியடி பிரகாரம் வழியாக உலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து, மூலவருக்கு 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமா÷ னார் தரிசனம் செய்தனர்.