செஞ்சி:செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். நந்திஸ்வரருக்கு பால், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், செய் தனர். மாலை 6 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சாமி கோவில் உலாவும் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் செல்வம் செய்தார். மேலச்சேரி மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில் மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார். தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் பிரேதோஷ வழிபாடு நடந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் அகல் விளக் கேற்றி வழிபட்டனர். பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.