பதிவு செய்த நாள்
26
நவ
2015
10:11
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட முருகன்,சிவன் கோயில்களில் திருக்கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விருதுநகர் வாலசுப்பிரமணியன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சொக்கநாத சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*காரியாபட்டிமுக்கு ரோடு மாரியம்மன் கோயில், சக்தி மாரியம்மன் கோயில், பஸ் ஸ்டாண்ட் பகுதி மாரியம்மன் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் திருக்கார்த்திகையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சொக்கப்பனை கொளுத்துதல் நடந்தது.
சேத்தூர்: சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மாலையில் 108 தீபங்கள் ஏற்பட்டது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*சேத்தூர் முத்தாம்மன் கோயிலில் கார்த்திகை விழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பூஜை முடிவில் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
*தேவதானம் நட்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டது.சிவனுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது.சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி: பட்டாசிற்கு பெயர் போன சிவகாசியில் தீபாவளியை காட்டிலும் கார்த்திகை தீப திருநாள் விமர்சியாக கொண்டாடப்படும். அன்று அனைவரும் குடும்பத்ததுடன் வீட்டில் இருந்து சுவாமிக்கு பணிவிடை செய்து பூஜைகள் நடத்தி கொண்டாடுவர். இந்த ஆண்டும் நேற்று காலை முதல் சிவகாசி நகர் அனைத்து கோயில்களில் கூட்டம் அலைமோதின. மார்க்கெட், சந்தை, பல்பொருள் அங்காடியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6 மணிக்கு மேல் வீடு, தெரு முற்றத்தில் அகல் விளக்கு ஏற்றினர். புத்தாடைகள் அணிந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாணவேடிக்கை , ஆயிரம் வாலா சர வெடி வைத்து கார்த்திகை தீப திருநாளை கொண்டாடினர்.
* சிவகாசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் சிவன் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு காலை முதல் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்ப ட்டன. மாலை 6 மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது. அதன்பின் சொக்கபனை கொளுத்தப்பட்டது. இதுபோல் சிவகாசி சுற்றுப்புகதி முருகன் கோயில், ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை கள் நடந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர்: * மடவார்வளாகம் வைத்தியநாதசாமி கோயிலில், ரகுபட்டர் தலைமையில் முருகன்,வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் நாராயணி மற்றும் ரமேஷ்பட்டர், பாலாஜி பட்டர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் ஆன்மிக பட்டிமன்றம் நடந்தது.
*ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாடவீதிகளில் எழுந்தருளினர். கீழரதவீதியில் சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
*வழிவிடு முருகன்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
இதுபோல் நகரிலுள்ள ஆனந்தவிநாயகர் மற்றும் அன்னவிநாயகர் உட்பட பல்வேறு முருகன்கோயில்களில் சிறப்பு பூஜை , சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. மாலையில் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு இரவு 7.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சஞ்சீவி மலையில் உள்ள குமாரசுவாமி கோயிலில், காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 6 மணிக்கு மலையில் தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். அம்பலபுளி பஜார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தன. சிவாலயங்கள், அம்மன் கோயில்களில் நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று மாலை 6.35 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயில்பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி தலைமை வகித்தார். கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருக்கார்த்திகை தீபத்திற்கு சிறப்புபூஜைகள் நடைபெற்றது.
* வைப்பாற்றங்கரை ஸ்ரீமகாசக்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை 6.40 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள தெப்பத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் நேற்று நடைபெற வேண்டிய தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. கோயில் குருக்கள் தெப்பத்தில் உள்ள மண்டபம் கோயில் வாசலில் நேற்று மாலை 6.45 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றினார். தெப்பத்திருவிழா நடைபெறாத நிலையில் பக்தர்கள் பலர் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று மாலை 6.45 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் சஞ்சிவிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.