மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, சுவாமி தங்க கவசத்தில் அருள் பாலித்தார். மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில், நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமி செய்திருந்தார்.