கோவை: ஈஷா யோகா மையத்தில், பவுர்ணமி கார்த்திகை தீப திருநாள் விழா கொண்டாப்பட்டது. ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை தீப நாள், தியானலிங்கம் உலகிற்கு அர்பணிக்கப்பட்ட நாளாக சிறப்பிக்கப்படுகிறது. கலாசார பண்டிகையாக கொண்டாடப்படும் இந்நாளில், தீபங்களை ஏற்றி கடவுள் ஆசியை பெறுவது வழக்கம். ஈஷாவில், ஆசிரமவாசிகள், தன்னார்வ தொண்டர்கள் தியானலிங்க வளாகத்தில் தீபங்களை ஏற்றி வழிப்பட்டனர். தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம் நடந்தது.