Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறிய கோயில்களிலும் திருப்பணி: ... அழுக்கு சாமியார் கோவிலில் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிக்கை எண்ணும் இடத்தில் போலீசின் டிரஸ்கோடு மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2015
11:11

சபரிமலை :சபரிமலையில் காணிக்கை எண்ணும் இடத்தில் போலீசின் டிரஸ்கோடு மாற்றப்பட்டது. இனி இவர்களும் வேட்டி அணிந்துதான் செல்ல வேண்டும்.சபரிமலையில் காணிக்கை எண்ணும் இடத்தில் உள்ள தேவசம்போர்டு ஊழியர்கள் வேட்டி, துண்டுதான் அணிய வேண்டும். உள்ளாடைகள் அணியக்கூடாது. இப்படி கடுமையான விதிகள் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு உண்டு. இந்நிலையில் கடந்த ஆண்டு மகரவிளக்கு முடிந்த பின்னர் உண்டியல் பணம் திருடியதாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பாதுகாப்புக்காக போலீசை நியமிக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி 20 போலீசார் இங்கு ஷிப்ட் முறையில் நியமிக்கப்பட்டனர். ஆனால் போலீசார் தங்களின் பேன்ட், சட்டை என வழக்கமான சீருடையில் சென்றனர். இது இரண்டு விதமான உரிமையா? என்ற கேள்வி எழுந்தது. தேவம்போர்டு ஊழியர்கள் வேட்டி-துண்டு அணிந்து செல்லும் போது போலீஸ் மட்டும் இப்படி வரலாமா? என்ற கேள்வி எழுந்தது.இதுபற்றி தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஐகோர்ட் நியமித்துள்ள தனி அதிகாரி பாபுவும் இதில் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் படி காணிக்கை எண்ணும் இடத்தில் பணிபுரியும் போலீசாருக்கு தேவசம்போர்டு சார்பில் வேட்டி, துண்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.இன்று முதல் காணிக்கை எண்ணும் இடத்தில் போலீஸ் வேட்டி அணிந்து பணியில் இருப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar