விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலய விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மறை வட்ட அதிபர் பாதிரியார் ஞானபிரகாசம், சவேரியார் உருவம் பொறித்த கொடியினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். துணை பாதிரியார் தாமஸ் எடிசன், பாதிரியார் ஆரோக்கிய செல்வம்,எஸ்.எப்.எஸ்.மெட்ரிக்., மேல்நிலை பள்ளி பிரிட்டோ, பொருளாளர் அந்தோணி ராஜ் <உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான டிச.,6ல் பாதிரியார்கள் தர்மராஜ், க.ஜோசப் ராஜசேகர் தலைமையில் திருப்பலி, மறையுரை நடக்கிறது. தொடர்ந்து தூய சவேரியார், தூய <லூர்து அன்னை, மிக்கேல் அதி தூதர் தேர்பவனி நடக்கிறது. 10ம் நாளன்று ஆடம்பர கூட்டு திருப்பலி , மறையுரை நடக்கிறது. ஏற்பாடுகளை சவேரியார் நகர் பாதிரியார் ஆரோக்கிய செல்வம் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.