பதிவு செய்த நாள்
30
நவ
2015
11:11
சபரிமலை: ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சபரிமலை, பம்பை உள்ளிட்ட 35 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் நடத்தப்படுகிறது. சன்னிதானத்தில் தேவசம்போர்டு 24 மணி நேரமும் அன்னதானம் நடத்துகிறது.
பக்தர்களுக்கு சேவை செய்வதில் ஐயப்பா சேவா சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அன்னதானம் நடத்தி வருகிறது. சபரிமலை, பம்பை, வலியானவட்டம், கரிமலை, எருமேலி, அழுதை உட்பட சபரிமலை பாதைகளில் 35 இடங்களில் அன்னதானம் நடத்துகிறது, காலை 7.30 முதல் 11 வரை உப்புமா, பொங்கல், பகல் 12 முதல் மூன்று மணி வரை சோறு, ரசம், பொரியல், ஊறுகாய், மாலை 6.45 மணி முதல் இரவு பத்து மணிவரை உப்புமா, கஞ்சி ஆகியவை வழங்கப்படுகிறது.
பம்பை முதல் சன்னிதானம் வரை 21 இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இவை பம்பை அரசு ஆஸ்பத்திரியுடன் ஹாட்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சபரிமலை, சரங்குத்தி, மரக்கூட்டம், சபரிபீடம், அப்பாச்சிமேடு, நீலிமலை, சுவாமி ஐயப்பன் ரோட்டில் கல்மேடு, செழிக்குழி, மடுக்கா ஆகிய இடங்களில் ஸ்டிரெச்சர் சர்வீஸ் உள்ளது.
சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னாதான மண்டபத்தில் தேவசம்போர்டு சார்பில் 24 மணிநேரம் தொடர்ச்சியாக அன்னதானம் நடக்கிறது.