கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் சத்யசாய் ஆன்மிக சமூக நலமையத்தில் சத்யசாய்பாபா பிறந்த நாள் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்யசாய் பாபாவின் 90வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. ஆசுகவி ஆராவமுதன், கம்பன் கழக செயலாளர் சங்கர், பேராசிரியர் அங்கப்பன் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., நகர சேர்மன் பாலகிருஷ்ணன் ஆகியோர் வேட்டி, சேலை வழங்கினர். ராமநாதன், வீட்டு வசதி சங்க தலைவர் பால்ராஜ் ஆகியோர் பாலவிகாஸ் குழுந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர். சிறுவங்கூர் சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.