பதிவு செய்த நாள்
03
டிச
2015
11:12
ஈரோடு: ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி, செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 6ம் தேதி நடக்கிறது. முன்னதாக, 4ம் தேதி காலை, 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகிறது. 5ம் தேதி யாகசாலை பூஜையும், 6ம் தேதி காலை, 7 மணிக்கு செல்வவிநாயகர் பரிவார தெய்வங்களுடன், மூல ஆலயத்துக்குள் புறப்படுதல், 7.15 மணிக்கு கோபுர விமானங்களுக்கும், 7.30 மணிக்கு செல்வ விநாயகருக்கும், தட்சிணாமூர்த்தி, தர்மசாஸ்தா, மஹாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர் உட்பட ஸ்வாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8 மணி முதல் அன்னதானமும், 9 மணிக்கு தச தரிசனத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.