திண்டுக்கல்: திண்டுக்கல் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் - ஞானாம்பிகை பத்மகிரிஸ்வரர், ஸ்ரீஅபிராமி அம்மன் கோயில் திருப்பணிக்குழு சார்பில் கால்கோள் விழா நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் வேலுச்சாமி, நிர்வாகி கந்தசாமி தலைமை வகித்தார். சிறப்பு பூஜைகளோடு முதல் யாகவேள்விக்கான முகூர்த்தக்கால் நிறுவப் பட்டது. திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் குப்புச்சாமி, துணைத் தலைவர் சுந்தரராஜன், நத்தம் தொகுதிச் செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.