Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிரங்குடி மகான் பக்கீர் ... செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோட்டை கும்பாபிஷேக விழா முடிந்ததும் கொட்டித் தீர்த்த கனமழை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2015
12:12

திருச்சி: மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா முடிந்ததும், கனமழை பெய்தது. பக்தர்கள் நனைந்தபடியே கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி, மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அதிகாலை, 5 மணி முதலே பக்தர்கள் வரத்துவங்கினர். மாணிக்க விநாயகர் சன்னதி ராஜகோபுரம் வழி, தாயுமான ஸ்வாமி சன்னதி வழித்தடங்களில் போலீசார் தடுப்புகள் கட்டி மறித்ததுடன், சிறப்பு அனுமதி பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காலை, 8 மணிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தவிர, மலைக்கோட்டையை சுற்றியுள்ள வீடுகள், கடைகளின் மொட்டை மாடியில் நின்றபடி பொதுமக்கள் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். காலை, 9 மணிக்கு கும்பாபிஷேகம் சிறப்புடன் முடிந்தது. 9.30 மணிக்கு சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் கும்பாபிஷேகம் காண மலை மீது சென்றவர்கள் கீழே இறங்கும் வரை, கீழே இருந்த மக்களை தரிசனத்துக்கு மேலே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், மாணிக்க விநாயகர் சன்னதி துவங்கி, தாயுமான ஸ்வாமி படிக்கட்டுகள் வரை கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது. காலை, 10.30 மணிக்கு மேல் மழை கொட்ட ஆரம்பித்து, மதியம், 3 மணி வரை நீடித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar