Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்லியனூர் கோவிலில் மகா ருத்ர ஜெபம் இன்று ஆடிப்பெருக்கு: காவிரி பெண்ணே வாழ்க! இன்று ஆடிப்பெருக்கு: காவிரி பெண்ணே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-2: இனிமையாகப் பேசுங்கள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
04:08

ரமலான் நோன்பை நல்ல முறையில் கடைபிடித்து வரும் வேளையில், முகம் மலர பேசுவது குறித்து இன்று சிந்திப்போம். சிலரைப் பார்க்கச் சென்றால் பேச்சாலேயே விரட்டி விடுவார்கள். அந்தளவுக்கு வார்த்தைகளில் கடுமை இருக்கும். கனிவாகப் பேசுவதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்புகிறார்கள். நம்மைக் காண வருபவர் எத்தகைய ஏழையாக இருந்தாலும், இதை கடைபிடிக்க வேண்டும். ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார். இதுபற்றி, நாயகம்(ஸல்) அவர்களிடம் தகவல் சொல்லப்பட்ட போது, அவன் நல்லவனில்லை, இருந்தாலும் அவனை உள்ளே வரச்சொல்லுங்கள், என்றார்கள். அந்த மனிதரிடமும் பரிவுடன் பேசினார்கள். அந்த மனிதர் சென்ற பிறகு, நாயகம்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா நாயகி அவர்கள், அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது? என்று கேட்டார்கள்.

அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள்,இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான், என்று பதிலளித்தார்கள். இன்னொரு சம்பவத்தையும் உதாரணம் காட்டலாம்.
ஒருசமயம் நாயகம்(ஸல்) அவர்கள், தங்கள் தோழர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் அவரைக் காண வந்தார். உடனே நாயகம்(ஸல்) அவர்கள், தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து விட்டு, அதில் அவரை அமரச்செய்தார்கள். பின்னர் ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்து அமரச்செய்தார்கள். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் அவர்கள் எழுந்துகொண்டு, அவருக்கு விரிப்பைக் கொடுத்தார்கள். இதில் இருந்து அவர்களது கனிவான உபசரிப்பை உணரலாம். நம்மைத் தேடி வருபவர்கள், நமக்கு ஆகாதவர்களாக இருந்தாலும் அவர்களிடமும் கனிவு காட்டும் பண்பை இந்த ரமலான் காலத்தில் கற்றுக் கொள்வோம். காலம் முழுவதும் கடைபிடிப்போம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 
temple news
அன்னூர்; மதுர காளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று நடந்தது.லக்கேபாளையம் கோவில் பாளையத்தில் 350 ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar