Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ... மாளிகைப்புறம் கோயில் அருகே நீரூற்று: கோயில் கிணறாக மாற்ற முடிவு மாளிகைப்புறம் கோயில் அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.20ல் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.20ல் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

10 டிச
2015
10:12

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.,20ல் நடக்கிறது. இதையொட்டி திருப்பணிகள் மும்முரமாக நடக்கிறது. இலங்கை மன்னன் சிவபக்தரான ராவணனை ஸ்ரீராமர் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சிவலிங்கத்தை உருவாக்கினார். அங்கு பூஜை செய்து, புனித நீராடி சிவனை வணங்கினார். ராமபிரான், சிவனை வழிபட்ட இடத்தில் உருவானதால் ராமநாதசுவாமி கோயில் என்றழைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர்.இக்கோயிலில் கடந்த 5.2.2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் 2013ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம், புதியதாக கட்டப்படும் வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள், அம்மன் முகப்பு மண்டபம் கட்டுமான பணியால் தள்ளிபோனது.

2016ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்குள் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பந்தல் கால்கோள்விழாஇதையடுத்து ரூ.7.90 கோடி செலவில் நடைபெற்றுவரும் திருப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.கோயில் கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்களில் மராமத்து பணிகள் முடிவடைந்து வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஜன., 20 தேதி காலை 9.40 முதல் 11 மணிக்குள் கும்ப லக்னத்தில் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைக்கான பந்தல் அமைக்க இன்று (டிச.10) வடக்கு நந்தவனத்தில் பந்தல் கால்கோள் விழா நடக்கிறது. என கோயில் அதிகாரி தெரிவித்தார். கோயில் வடக்கு நந்தவன பந்தலில் 108 யாக குண்டம் அமைத்து, 216 சிவாச்சாரியார் கள் மந்திரம் முழங்க ஜன., 15 தேதி(தை 1ல்) முதல் காலயாக பூஜைகள் ஆரம்பமாகிறது. இக்கோயிலில் உருவான பின் தற்போது தான் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 கோபுரங்களுக்கு ஒரே சமயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 41 நாள்களே உள்ளதால் திருப்பணிகளை டிச., 31க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar