Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பலத்த மழை பெய்தும் திருவாடானை ... பரிகார நந்திஸ்வரர் கோயிலில் கூட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையின் நுழைவு வாயில் பம்பையை அழகுபடுத்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2015
11:12

சபரிமலை: சபரிமலையில் நுழைவு வாயிலான பம்பையை அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபரிமலை உயர்மட்ட கமிட்டி தலைவரும், கேரள அரசு முன்னாள் தலைமை செயலாளருமான ஜெயக்குமார் கூறினார். சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கழிவுநீரை சுத்தப்படுத்தி காட்டில் விடுவதற்கு 22 கோடி ரூபாய் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் நிறுவப்பட்டது. கடந்த அக்டோபரில் இது அவசரம் அவசரமாக திறக்கப்பட்டது. ஆனால் அதன் செயல்பாடு முழுமை அடையாததால் பல இடங்களிலும் கழிவறை தண்ணீர் உடைந்து வெளியேற தொடங்கியது. மேலும் இந்த நிலையத்தில் கழிவுநீரில் இருந்து பாக்டீரியா உருவாகாததால் அந்த தண்ணீர் அப்படியே காட்டில் போகும் நிலை ஏற்பட்டது. இது பற்றி கேரள ஐகோர்ட் நியமித்த தனிஆணையர் பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் சபரிமலை உயர்மட்ட கமிட்டி தலைவர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சில பிரச்னைகள் ஓரிரு நாளில் சரி செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு ஆரம்ப நிலையில் ஏற்படக்கூடிய சில பிரச்னைகள் இருக்கிறது. கழிவு நீர் வரும் பாயின்டுகள், செப்டிக் டேங்க் கசிவு போன்றவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது பற்றி 12-ம் தேதி திருவனந்தபுரத்தில் கூடும் உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.சபரிமலையின் நுழைவு வாயில் என்ற முறையில் பம்பை அழகு படுத்தப்படும். சன்னிதானத்தில் விருந்தினர் மாளிகை முன்புறம் பக்தர்கள் தங்குவதற்கான வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar