Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருச்சானூர் பிரம்மோற்சவம்: பெரிய சேஷ வாகனத்தில் தாயார் வீதிஉலா! திருச்சானூர் பிரம்மோற்சவம்: பெரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவபாஷாண கோயிலில் அறநிலையதுறை பொறியாளர்கள் ஆய்வு!
எழுத்தின் அளவு:
நவபாஷாண கோயிலில் அறநிலையதுறை பொறியாளர்கள் ஆய்வு!

பதிவு செய்த நாள்

10 டிச
2015
12:12

தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நவபாஷாண கோயிலில் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. இதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு பக்தர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும், நவக்கிரக கோயில் பகுதியில் தேங்கும் கழிவுகளை அகற்ற இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும் என, தேவிபட்டினத்தை சேர்ந்த முருகேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிபதிகள் நவபாஷாண கோவிலை ஊராட்சி நிர்வாகம் இந்துஅறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், கழிவுகளை அகற்றுவது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து இந்து அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, உத்தரவிட்டனர். இந்நிலையில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அமர்வு முன்பு டிச.,7ல் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

நவபாஷாண கோவில் கடலின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலின் கீழ்பகுதியில் தேங்கும் நீர் மறுபகுதிக்குச் செல்ல வழியின்றி தடுப்பு சுவர் அமைந்துள்ளதால் கோயில் மாசுபடுகிறது. எனவே நவக்கிரகம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ள தடுப்பு சுவரை அகற்றி, இதற்கு பதில் துாண்கள் அமைப்பது குறித்து இந்து அறநிலைய துறை பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு டிச.15ல் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல செயற்பொறியாளர் மாணிக்கம், சிவகங்கை கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் நவபாஷாண கோயிலில் ஆய்வு செய்தனர். கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன் கூறுகையில், “உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி நவகிரகம் அமைந்துள்ள பகுதியில் தடுப்பு சுவரை அகற்றி தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக புதிய துாண்கள் அமைப்பது குறித்தும், கடற்கரை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான செலவினங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கை டிச.,15ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar