கீழக்கரை: கீழக்கரை தட்டார்தெரு உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மலர் அலங்காரம் நடந்தது. பெண்கள் எலுமிச்சை தீபம், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சக்தி ஸ்தோத்திரம், பஜனை நடந்தது. ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.