Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோவில்களில் வைகுண்ட ஏகாதசி ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
சிவகங்கை கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

22 டிச
2015
10:12

சிவகங்கை: சிவகங்கை பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள், பரமபதவாசலில் எழுந்தருளினார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேம்பத்தூர்: சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலை 5:30 மணிக்கு சீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் பரமபதவாசலில் எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு, கருடசேவையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். கல்லூரணி: திருப்பாச்சேத்தி அருகே கல்லூரணி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. காலை 7 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்புவனம் அருகே கொந்தகை பெருமாள் கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு சீதேவி, பூதேவியருடன் பெருமாள் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

*திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.இக்கோயிலில் நேற்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சி சிறப்பு பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன்உற்சவ பெருமாள் எழுந்தருள, காலை 9.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பிரகார வலம் வந்தனர்.மாலையில் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், இரவில் பெருமாள் திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அய்யங்குளத்தில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நேற்றுமுன்தினம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar