Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் ... சங்கராபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு சங்கராபுரம் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!

பதிவு செய்த நாள்

23 டிச
2015
11:12

காரமடை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் நேற்றுமுன் தினம் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள் சொர்க்க வாசல் வழியே வந்தார். அவரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். கொங்கு நாட்டில் முதன்மை வைணவ ஸ்தலமானது காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலாகும். இக்கோவிலில் சுயம்புவாய் எழுந்தருளிய அரங்கநாத சுவாமி லிங்க வடிவில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் மாசி மக திருத்தேர் விழாவும், புரட்டாசி மாத சனிக்கிழமை விழாக்களும் மற்றும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களும் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.  ஸ்ரீதேவி பூதேவியுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் அரங்கநாத பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்தார். பெருமாளை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமனுஜர் ஆகிய மூவரும் எதிர் கொண்டு சேவித்தனர். இவர்கள் மூவருக்கும் முதலாவதாக பெருமாள் காட்சி தந்தார். பெருமாளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ராமா, கோவிந்தா என கோஷமிட்டு சொர்க்க வாசல் வழியே வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar