பெண்ணாடம்: மார்கழி இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி, பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.