பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
திருவெண்ணெய் நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் ஏகதின சிறப்பு வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூரில் திருவாவடுதுறை ஆதீன கட்டுபாட்டிலுள்ள மெய்கண்டார் கோவிலில் ஏகதின சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. அதி காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி வழிபாட்டுடன் விழா துவங்கியது. காலை 8:30 மணிக்கு மலட்டாற்றிலிருந்து புனித நீர் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு பேராசிரியர் ராஜன், ‘சேக்கிழார் திருவாக்கில் மலர்ந்த திருமுறைகள்’ குறித்து சொற்பொழிவாற்றினார். திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் அருளாசி வழங்கினார். மதியம் 12:30 மணிக்கு மெய்கண்டாருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு மகேசுவரபூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் நெய்வேலி, சீர்காழி, உளுந்துõர் பேட்டை, ஆத்துõர், சின்னசேலம், திருவண்ணாமலை, பண்ருட்டி, வாழப்பாடி, மஞ்சினி, விழுப்புரம் ஊர்களை சேர்ந்த சைவ சித்தாந்த மைய மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள், அமைப்பாளர்கள் ரவீந்திரன், சிவக்குமார், சரவணன் செய்திருந்தனர்.